மயிலாடுதுறையில் கோவில் கும்பாபிஷேகத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கல தெருவில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது.இக் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் பங்கேற்க மயிலாடுதுறை கீழ நாஞ்சில் நாடு பகுதியை சேர்ந்த சாரதா தனது மகன் முரளியுடன் வந்து இருந்தார்.
கும்பாபிஷேகம் முடிந்து அவர்கள் வெளியே பிரசாம் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கொண்டு மர்ம ஆசாமி சாரதா கழுத்தில் கிடந்த 4¼ பவுன் செயின் மற்றும் டாலரை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டான். இது குறித்து மயிலாடுதுறை போலீசில் சாரதாவின் மகன் முரளி புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து நகை பறித்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
கோவில் கும்பாபிஷே கத்தில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.