செய்திகள்

பாலிடெக்னிக் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2016-06-26 16:42 IST   |   Update On 2016-06-26 16:42:00 IST
மாங்காடு அருகே பாலிடெக்னிக் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:

மாங்காடு அடுத்த பரணி புத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராம்குமார். ஆலப்பாக்கத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை ராம்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News