செய்திகள்

குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் பால்கனி சுவர் இடிந்து 3 பேர் படுகாயம்

Published On 2016-06-26 15:49 IST   |   Update On 2016-06-26 15:49:00 IST
குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த 3 பேருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாம்பரம்:

கிழக்கு தாம்பரம் 13-வது வார்டு எம்.ஜி.ஆர்.நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. நேற்று இரவு ‘சி’ பிளாக்கில் உள்ள 3-வது மாடியின் பால்கனியில் அங்கு குடியிருக்கும் சுந்தர், அன்பு, சிவக்குமார் ஆகியோர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பால்கனி சுவர் இடிந்து 3 பேரும் கீழே விழுந்தனர். பலத்த காயம் அடைந்த சுந்தருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அன்பு, சிவக்குமார் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Similar News