செய்திகள்
மறைமலைநகர்: கத்திமுனையில் அடகு கடையில் கொள்ளையடிக்க முயற்சி
கத்திமுனையில் அடகு கடையில் கொள்ளையடிக்க முயன்ற போது அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மடக்கி பிடித்து மறைமலைநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
செங்கல்பட்டு:
மறைமலைநகர் காட்டாங்கொளத்தூர், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ராஜஸ்தானை சேர்ந்த பிரகாஷ் என்பவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.
இங்கு தினமும் நகையை அடகு வைப்பதற்கும், திருப்புவதற்கும் பல பேர் வந்து செல்வார்கள்.
இந்த நிலையில் நேற்று பகல் 12.30 மணி அளவில் 3 பேர் நகை அடகு கடைக்கு வந்தனர். அவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். உடனே பிரகாஷ் கடையின் உள்ளே சென்று தண்ணீர் குடிக்குமாறு கூறினார்.
உள்ளே சென்ற 3 பேரும் திடீரென பிரகாசிடம் கத்தியை காட்டி நகை-பணத்தை தரும்படி கேட்டு மிரட்டினர். இதனால் பயந்து போன பிரகாஷ் அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் 3 பேரையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து மறைமலைநகர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மறைமலைநகர் காட்டாங்கொளத்தூர், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ராஜஸ்தானை சேர்ந்த பிரகாஷ் என்பவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.
இங்கு தினமும் நகையை அடகு வைப்பதற்கும், திருப்புவதற்கும் பல பேர் வந்து செல்வார்கள்.
இந்த நிலையில் நேற்று பகல் 12.30 மணி அளவில் 3 பேர் நகை அடகு கடைக்கு வந்தனர். அவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். உடனே பிரகாஷ் கடையின் உள்ளே சென்று தண்ணீர் குடிக்குமாறு கூறினார்.
உள்ளே சென்ற 3 பேரும் திடீரென பிரகாசிடம் கத்தியை காட்டி நகை-பணத்தை தரும்படி கேட்டு மிரட்டினர். இதனால் பயந்து போன பிரகாஷ் அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் 3 பேரையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து மறைமலைநகர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.