செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கள ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

Published On 2016-06-24 20:29 IST   |   Update On 2016-06-24 20:30:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் கள ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுக்கோட்டை மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வாயிலாக 3ஆம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் திருமயம், பொன்னமராவதி, மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்ளில் உள்ள 11 தொகுப்புகளுக்கு கூடுதலாக ஒரு தொகுப்பிற்கு 1 நபர் வீதம் 11 தொகுப்பிற்கும் 11 தொகுப்பு களப்பணியாளர்களும் மற்றும் 2–ஆம் கட்ட அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் ரெத்தினக்கோட்டை தொகுப்பிற்கு காலியாக உள்ள ஒரு பணியிடத்திற்கு 1 நபரும் கீழ்க்கண்ட தகுதிகளை உடைய 12 தற்காலிக கள ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப் படவுள்ளனர்.

பதவியின் பெயர் : சமுதாய கள ஒருங்கிணைப்பாளர்.

தகுதிகள்: சமுதாய கள ஒருங்கிணைப்பாளர் பணிக்கு குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மகளிர் சுயஉதவிக்குழுவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உறுப்பினராகவும், 2 ஆண்டு பொறுப்பாளராகவும் இருத்தல் வேண்டும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

40 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். தொகுப்பில் உள்ள ஊராட்சிகளுக்கு சென்று புள்ளி விபரங்களை பெறுவதற்கு விருப்பம் உள்ளவராக இருத்தல் வேண்டும், கைப்பேசி வைத்திருப்பதுடன் எஸ்.எம்.எஸ், அனுப்புவதற்கும், வரும செய்திகளை படிப்பதற்கும் தெரிந்திருக்க வேண்டும், இருசக்கர வாகனம் ஓட்டவும் மற்றும் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேற்கண்ட தகுதிகளை பெற்றுள்ளவர்கள் இப்பதவிகளுக்கான விண்ணப்பங்களை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 29.06.2016க்குள் இணை இயக்குநர் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, புதிய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு உரிய விவரம் மற்றும் சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்று அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News