செய்திகள்

சீர்காழி அருகே பாம்பு கடித்து பெண் பலி

Published On 2016-06-24 15:39 IST   |   Update On 2016-06-24 15:39:00 IST
சீர்காழி அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழ:

சீர்காழி அருகே உள்ள பச்சபெருமாநல்லூரை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி வைரம். இவர் வயலில் வேலை செய்த போது பாம்பு கடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Similar News