செய்திகள்

நாகை அருகே தவறி விழுந்து பெண் பலி

Published On 2016-06-24 15:20 IST   |   Update On 2016-06-24 15:52:00 IST
நாகை அருகே தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகை அருகே உள்ள பாகச்சாலை, தண்டமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மனைவி மலர் (வயது 45).

இவர் வீட்டின் பின்புறம் நடந்து சென்றபோது வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவரை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிம்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி பாகச்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News