செய்திகள்

உடலும்–உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க யோகா கற்க வேண்டும்: கலெக்டர் அறிவுரை

Published On 2016-06-22 19:32 IST   |   Update On 2016-06-22 19:32:00 IST
உடலும்–உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க யோகா கற்க வேண்டும் என புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் அறிவுரை வழங்கினார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புதுக்கோட்டை மாவட்ட யோகா சங்கம் மற்றும் ஆத்மா யோகா மையம் இணைந்து நடத்திய 2–வது சர்வதேச அளவிலான யோகா தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற யோகா நிகழ்ச்சியினை கலெக்டர் .சு.கணேஷ் தலைமையேற்று யோகா என்பது இந்தியாவில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவாகும்.

யோகா என்பதே தன்னுள் எப்படி வாழ வேண்டும் என்னும் வாழ்க்கையின் சாரத்தை பொதிந்து வைத்திருக்கும் அறிவியல் ஆகும். இது தனிநபரின் உடல், மனம் மற்றும் ஆன்மாவை இயற்கையின் பொருத்தமான கொள்கைகளுடன் சமநிலையுடன் இணைந்து சுகாதாரமாக பராமரிக்க உதவும். இது மக்களை துடிப்பாகவும், ஆரோக்கிய மாகவும் இருப்பதை முழுமையான ஞானத்தை உணரச்செய்ய உதவும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது.

எனவே இத்தகைய சிறப்புடைய யோகாவினை அனைத்து பொதுமக்களும் தினமும் உரிய முறையில் பயிற்சி மேற்கொண்டு தங்களது உடலையும், உள்ளத்தையும் என்றும் இளமையுடன் வைத்திருந்து நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சி நாதன், நகர்மன்றத்தலைவர் இரா.ராஜசேகரன், வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி தாளாளர் கவிஞர் தங்கமூர்த்தி, மருத்துவர் ராமதாஸ், மாருதி மோகன், பள்ளி, கல்லூரி, இளைஞர் அமைப்புகள், நேரு யுவகேந்திரா, நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள், கிராம வளர்ச்சி மையங்கள், யோகா மையங்கள், விளையாட்டு வீரர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News