செய்திகள்

கோபி அருகே பள்ளி கட்டிடம் பழுது: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்

Published On 2016-06-21 20:46 IST   |   Update On 2016-06-21 20:46:00 IST
கோபி அருகே பள்ளி கட்டிடம் பழுதானதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கோபி:

கோபி அருகே உள்ள புதுவள்ளியாம் பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து இருப்பதாகவும் புதிய கட்டிடம் கட்டக்கோரியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) குழந்தைகளுடன் பள்ளிக்கு வந்த பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது

இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை அடுத்து பெற்றோர் தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். மாணவ-மாணவிகள் இதையடுத்து பள்ளிக்கு சென்றனர்.

Similar News