செய்திகள்

நசியனூர் அருகே கரும்பு காடு தீ பிடித்து எரிந்தது

Published On 2016-06-21 20:37 IST   |   Update On 2016-06-21 20:37:00 IST
நசியனூர் அருகே கரும்பு காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு ஏக்கர் கரும்பு காடு தீயில் எரிந்து நாசமனது.
பெருந்துறை:

நசியனூர் அருகே உள்ள தொட்டிபாளையம் மனக்காட்டில் ஜெகநாதன் (வயது 40) என்பவருக்கு சொந்தமான கரும்புக்காடு உள்ளது. இவரது கரும்புக்காட்டுக்கு அருகில் உள்ள கரும்பு காட்டில் உள்ள கரும்பு சோகைக்கு தீ வைக்கப்பட்டது.

அப்போது வீசிய பலத்த காற்று காரணமாக இதில் இருந்த பறந்த தீப்பொறி ஜெகநாதன் கரும்பு காட்டுக்குள் விழுந்தது. இதனால் அவரது கரும்பு காட்டில் தீ விபத்து ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக தீ மளமள என்று பிடித்து எரிந்தது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் அதிகாரி பாஸ்கரன் தலைமையில் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் ஒரு ஏக்கர் கரும்பு காடு தீயில் எரிந்து நாசமனது.

Similar News