செய்திகள்

மாமல்லபுரம் அருகே மணல் கடத்திய டிரைவர் கைது

Published On 2016-06-21 11:43 IST   |   Update On 2016-06-21 11:43:00 IST
மாமல்லபுரம் அருகே மணல் கடத்திய டிரைவரை கைது செய்த போலீசார் லாரியையும் பறிமுதல் செய்தனர்
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த கிருஷ்ணன்காரணை பக்கிங்காம் கால்வாய் அருகே சவுடு மணல் கடத்தப்படுவதாக மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மணல் கடத்தி வந்த லாரியை மடக்கி பிடித்து டிரைவர் இளங்கோவை கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News