செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 மதுக்கடைகள் மூடப்பட்டன: தமிழக அரசு உத்தரவு

Published On 2016-06-20 22:55 IST   |   Update On 2016-06-20 22:55:00 IST
தமிழக அரசின் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன.
புதுக்கோட்டை:

தமிழ்நாட்டில், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க. வாக்குறுதி அளித்தது. அதன்படி, அ.தி.மு.க.மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, மதுக்கடைகளின் விற்பனை நேரம் குறைக்கப்படும் என்றும், முதல் கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 24-ந் தேதி முதல் மதுக்கடைகளின் விற்பனை நேரம் குறைக்கப்பட்டது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று(நேற்று) முதல் முதல்கட்டமாக மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று 500 மதுக்கடைகள் மூடப்பட்டன.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சாந்தநாதபுரம் 5-ம் வீதி, திலகர் திடல், திருவப்பூர், சந்தைப்பேட்டை, பொன்னமராவதி நகர் பகுதி, காரையூர், கீரனூர் புலியூர் சாலை, குரும்பூர் ஒத்தக்கடை, ஆலங்குடி சாலை மேட்டுப்பட்டி, விராலிமலை நகர் பகுதி, அறந்தாங்கி அருகே வல்லவாரி, முள்ளங்குறிச்சி அருகே ஊரக்காடு, மூக்கம்பட்டி, விராலிமலை அருகே ராஜாளிபட்டி ஆகிய 14 மதுக்கடைகள் நேற்று முதல் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News