செய்திகள்
புதுக்கோட்டையில் நகராட்சி லாரி மூலம் கழிவுநீரை திறந்து விட்டதால், பயணிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்
புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய பகுதியில் நகராட்சி லாரி மூலம் கழிவுநீரை திறந்து விட்டனர். இதனால் பயணிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகரின் மையபகுதியில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அமைந்து உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் புதிய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை.
பஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஆண், பெண் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததால் தூர்நாற்றம் வீசுகின்றன. இது குறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நகராட்சி லாரி மூலம் கழிவுநீரை திறந்து விட்டனர். இதனால் பயணிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதுக்கோட்டை நகரின் மையபகுதியில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அமைந்து உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் புதிய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை.
பஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஆண், பெண் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததால் தூர்நாற்றம் வீசுகின்றன. இது குறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நகராட்சி லாரி மூலம் கழிவுநீரை திறந்து விட்டனர். இதனால் பயணிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.