செய்திகள்

மயிலாடுதுறை அருகே 2 மாணவர்கள் மாயம்: போலீசார் விசாரணை

Published On 2016-06-19 16:55 IST   |   Update On 2016-06-19 16:55:00 IST
மயிலாடுதுறை அருகே ஒரே பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் திடீரென மாயமான சம்பவம் மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே உள்ள மாபடுகை அண்ணாநகரை சேர்நத ராஜேந்திரன் என்பவர் மகன் ராஜேந்திரன். இவரும், அந்தபகுதியை சேர்ந்த மணி என்பவர் மகன் கார்த்தி (12) ஆகிய இருவரும் மூவலூர் ஊராட்சி ஒன்றய பள்ளியில் படித்து வந்தனர்.

இவர்கள் கடந்த 14–ந்தேதி பள்ளிக்கு சென்றனர். பின்னர் வீட்டுக்கு வரவில்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்கள் எனபது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மகாதேவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மாயமான மாணவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று மயிலாடுதுறை ரெயில் நிலையம் சென்று அங்கிருந்து விழுப்புரம் பாசஞ்சர் ரெயில் ஏறி சென்றது தெரியவந்துள்ளது.

எனவே அவர்கள் விழுப்புரம் பகுதியில் உள்ளனரா? அல்லது அவர்களை மர்ம நபர்கள் யாரும் கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் திடீரென மாயமான சம்பவம் மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News