செய்திகள்

குத்தாலம் அருகே அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்: தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு

Published On 2016-06-18 22:07 IST   |   Update On 2016-06-18 22:07:00 IST
அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குத்தாலம்:

குத்தாலம் அருகே அடுத்த சித்தாம்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் செந்தில். கோமல் பகுதி அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கோமல் பகுதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி. தி.மு.க வார்டு உறுப்பினர்.

இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் கணபதியின் தாய் மற்றும் அவரது மனைவிக்கு செந்தில் வேலை வழங்கவில்லையாம். இது குறித்து கணபதி, செந்திலிடம் கேட்டபோது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது செந்திலுக்கு கணபதி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அவர் பாலையூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Similar News