செய்திகள்

வேதாரண்யம் அருகே குடும்பத் தகராறில் தூக்கி வீசப்பட்ட 1½ மாத குழந்தை: தந்தைக்கு போலீசார் வலைவீச்சு

Published On 2016-06-16 17:44 IST   |   Update On 2016-06-16 17:45:00 IST
வேதாரண்யம் அருகே குடும்பத் தகராறில் 1½ மாத குழந்தையை தூக்கி வீசிய தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றார்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் காவல் சரகம் செண்பகராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் சதீஷ்(25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சீதாமணி(19) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயஸ்ரீ சக்தீஸ்வரராம் என்ற 1½ மாதம் ஆண் குழந்தை உள்ளது.

கணவன்–மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சதீஷ், தனது 1½ மாத குழந்தையை தூக்கி வீசினாராம். இதில் பாதிக்கப்பட்ட குழந்தையை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சதீஷை தேடி வருகின்றார்.

Similar News