செய்திகள்

வேதாரண்யம் அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி

Published On 2016-06-15 16:33 IST   |   Update On 2016-06-15 16:33:00 IST
வேதாரண்யம் அருகே வயலுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளியை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பகுதி அழகு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணியன் (வயது65). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சம்வபத்தன்று அதே ஊரில் உள்ள ஒருவரது வயலுக்கு வேலைக்கு சென்றார். அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த மணியனை பாம்பு கடித்து விட்டது.

உடன் அவரை மீட்டு தலைஞாயிறில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதுகுறித்து தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News