செய்திகள்

கடலூரில் பொது இடத்தில் புகை பிடித்தவர்களிடம் ரூ.20 ஆயிரம் அபராதம் வசூல்

Published On 2016-06-14 16:02 IST   |   Update On 2016-06-14 16:03:00 IST
கடலூர் மாவட்டத்தில் பொது இடத்தில் புகை பிடித்தவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடலூர், குமராட்சி, காட்டு மன்னார்கோவில், புதுச்சத்திரம், பண்ருட்டி, நல்லூர், மங்களூர், விருத்தாசலம், வடலூர், குறிஞ்சிப்பாடி, உறையூர், புவனகிரி உள்பட 13 வட்டாரங்கள் உள்ளன.

இந்த பகுதிகளில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்திரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜவர்ஹர்லால் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார துரை ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது இடங்களில் புகை பிடித்தவர்கள் மற்றும் பள்ளி அருகே பீடி, சிகரெட் விற்றவர்கள் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Similar News