செய்திகள்
ஆலந்தூரில் ரேசன் குறை தீர்ப்பு முகாமில் அ.தி.மு.க.- தி.மு.க. வாக்குவாதம்
ஆலந்தூரில் ரேசன் குறை தீர்ப்பு முகாமில் அ.தி.மு.க. - தி.மு.க. தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆலந்தூர்:
பரங்கிமலை மண்டலத்துக்கு உட்பட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் குறை தீர்ப்பு கூட்டம் ஆலந்தூரில் உள்ள ஏ.ஜே.எஸ். நிதி பள்ளியில் இன்று நடந்தது.
ரேசன் கார்டு குறை தீர்ப்புக்கான இந்த கூட்டத்தை தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் நிர்வாகிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது 161-வது வட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் வேம்பரசன் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார்.
குறை தீர்ப்பு கூட்டம் குறித்து தங்களிடம் தகவல் தெரிவிக்காதது ஏன்? என்று அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டனர். அப்போது இது தொடர்பாக அ.தி.மு.க. - தி.மு.க. தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர்.
குறை தீர்ப்பு கூட்டம் தொடர்பான பேனர் எதுவும் இல்லாததால் அ.திமு.க.வினர் முதல்-அமைச்சர் படத்துடன் கூடிய பேனரை அங்கு வைத்தனர்.
பரங்கிமலை மண்டலத்துக்கு உட்பட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் குறை தீர்ப்பு கூட்டம் ஆலந்தூரில் உள்ள ஏ.ஜே.எஸ். நிதி பள்ளியில் இன்று நடந்தது.
ரேசன் கார்டு குறை தீர்ப்புக்கான இந்த கூட்டத்தை தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் நிர்வாகிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது 161-வது வட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் வேம்பரசன் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார்.
குறை தீர்ப்பு கூட்டம் குறித்து தங்களிடம் தகவல் தெரிவிக்காதது ஏன்? என்று அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டனர். அப்போது இது தொடர்பாக அ.தி.மு.க. - தி.மு.க. தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர்.
குறை தீர்ப்பு கூட்டம் தொடர்பான பேனர் எதுவும் இல்லாததால் அ.திமு.க.வினர் முதல்-அமைச்சர் படத்துடன் கூடிய பேனரை அங்கு வைத்தனர்.