செய்திகள்
சென்னையில் 7 சொகுசு கார்கள் திருடிய 5 பேர் கும்பல் கைது
மணப்பாக்கம் ரிவர்வியூ காலனி – அம்பேத்கர் நகர் லிங்க் சாலையில் உள்ள ஹுண்டாய் கார் நிறுவன குடோனில் கார்களை திருடிய வழக்கில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்
ஆலந்தூர் :
நந்தம்பாக்கத்தை அடுத்த மணப்பாக்கம் ரிவர்வியூ காலனி – அம்பேத்கர் நகர் லிங்க் சாலையில் ஹுண்டாய் கார் நிறுவன குடோன் உள்ளது.
இங்கு கடந்த 8–ந் தேதி இரவு ஒரு கும்பல் காவலாளி மனோகரனை தாக்கினர். பின்னர் அவரை கட்டி போட்டு விட்டு குடோனில் இருந்த 7 சொகுசு கார்களை திருடிச் சென்றது. இந்த நிலையில் வளசரவாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த 5 கார்களை போலீசார் மீட்டனர்.
அதன்பின் மதுரவாயல் அஷ்டலட்சுமி நகரில் நின்ற ஒரு காரையும், கோடம்பாக்கம் லிபர்டி அருகே இருந்த 7–வது காரையும் மீட்டனர். கடத்தப்பட்ட அனைத்து கார்களையும் போலீசார் மீட்டனர். அவைகளில் போலி நம்பர் பிளேட் ஒட்டப்பட்டு இருந்தது.
சொகுசு கார்கள் கடத்தல் கும்பலை போலீசார் தீவிர தேடி வந்தனர். அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் 8 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் ஒருவன் கார்கள் கடத்தலில் முக்கிய குற்றவாளி என்பது தெரிய வந்தது. அவனை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். இதில் மேலும் 4 பேர் போலீசில் சிக்கி உள்ளனர்.
கார்களை திருடிய கும்பல் ராமாபுரம் தாங்கல் தெருவைச் சேர்ந்த விஜயன் என்பவரிடம் நம்பர் பிளேட் எழுதி வாங்கியது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் கடத்தல் கும்பலில் உள்ள ஒருவன் விஜயனின் நண்பர் என்பதும் அவர் கேட்டுக் கொண்டதால் நம்பர் பிளேட் எழுதி கொடுத்ததாகவும் தெரிவித்தார். அவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
நந்தம்பாக்கத்தை அடுத்த மணப்பாக்கம் ரிவர்வியூ காலனி – அம்பேத்கர் நகர் லிங்க் சாலையில் ஹுண்டாய் கார் நிறுவன குடோன் உள்ளது.
இங்கு கடந்த 8–ந் தேதி இரவு ஒரு கும்பல் காவலாளி மனோகரனை தாக்கினர். பின்னர் அவரை கட்டி போட்டு விட்டு குடோனில் இருந்த 7 சொகுசு கார்களை திருடிச் சென்றது. இந்த நிலையில் வளசரவாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த 5 கார்களை போலீசார் மீட்டனர்.
அதன்பின் மதுரவாயல் அஷ்டலட்சுமி நகரில் நின்ற ஒரு காரையும், கோடம்பாக்கம் லிபர்டி அருகே இருந்த 7–வது காரையும் மீட்டனர். கடத்தப்பட்ட அனைத்து கார்களையும் போலீசார் மீட்டனர். அவைகளில் போலி நம்பர் பிளேட் ஒட்டப்பட்டு இருந்தது.
சொகுசு கார்கள் கடத்தல் கும்பலை போலீசார் தீவிர தேடி வந்தனர். அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் 8 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் ஒருவன் கார்கள் கடத்தலில் முக்கிய குற்றவாளி என்பது தெரிய வந்தது. அவனை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். இதில் மேலும் 4 பேர் போலீசில் சிக்கி உள்ளனர்.
கார்களை திருடிய கும்பல் ராமாபுரம் தாங்கல் தெருவைச் சேர்ந்த விஜயன் என்பவரிடம் நம்பர் பிளேட் எழுதி வாங்கியது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் கடத்தல் கும்பலில் உள்ள ஒருவன் விஜயனின் நண்பர் என்பதும் அவர் கேட்டுக் கொண்டதால் நம்பர் பிளேட் எழுதி கொடுத்ததாகவும் தெரிவித்தார். அவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.