செய்திகள்

ஈச்சங்காடு பகுதியில் நாளை மின் தடை

Published On 2016-06-08 16:48 IST   |   Update On 2016-06-08 16:51:00 IST
ஈச்சங்காடு நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

செந்துறை:

ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும்மாத்தூர், துளார், ஆதனக்குறிச்சி, முதுக்குளம், குவாகம், கொடுகூர், இடையக் குறிச்சி, வல்லம், முள்ளுக் குறிச்சி, தாமரைப் பூண்டி, ஆலத்தியூர், இருங்களாக்குறிச்சி, மணக்குடையான், கோட்டைக்காடு, மற்றும் பதுப்பாளையம். ஆகிய பகுதிகளுக்கு.

நாளை 9-ந்தேதி அன்று காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மாண கழகம் செந்துறை உதவி செயற்பொறியாளர் மு.கணேசன் தெரிவித்துள்ளார்.

Similar News