செய்திகள்

காங்கிரசுடன் கூட்டணியால் தி.மு.க.வுக்கு இறங்கு முகம்தான்: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2016-06-08 13:51 IST   |   Update On 2016-06-08 13:52:00 IST
தி.மு.க.வு.டன் காங்கிரஸ் இருக்கும் வரையில் தி.மு.க.வுக்கு இறங்கு முகம்தான் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆலந்தூர்:

மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நேற்று நள்ளிரவு பெங்களூரில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையதத்ல் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தி.மு.க. தலைவர் கருணாநிதி பி.ஜே.பி.யும் அ.தி.மு.க.வும் நெருங்கி வருகிறது. இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்று கூறியிருக்கிறார்.

காங்கிரசுடனான கூட்டணியை தி.மு.க. முறித்த போது கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொல்லி இருந்தார். மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி வைத்தார் அது ஏன்? அவர் மட்டும் கூட்டணி வைக்கலாம் மற்றவர்கள் வைக்க கூடாதா? தி.மு.க.வு.டன் காங்கிரஸ் இருக்கும் வரையில் தி.மு.க.வுக்கு இறங்கு முகம்தான்.

சமஸ்கிருத மொழி தமிழை போல பழமையான மொழி தான் – அதை பயில்வது தவறு இல்லை.

தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவது குறித்தான பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் இந்திய அரசு, இலங்கை அரசு, தமிழக அரசு, இலங்கையில் உள்ள வடகிழக்கு மாகாண அரசு, ஆகியவை இணைந்து தீர்வு காண வேண்டியுள்ளதால் தாமதம் ஏற்படுகிறது. வெகு விரைவில் தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News