செய்திகள்

வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கல்: அரியலூர் பெண் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2016-06-07 15:35 IST   |   Update On 2016-06-07 15:35:00 IST
அரியலூர் அருகே வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள இலந்தைக்கூடம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா (வயது 35). இவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வருவதாக வெங்கனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் சசிகலாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். மேலும் தொடர்ந்து கள்ளச் சந்தையில் மதுபாட்டில்களை விற்று வந்தார்.

எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரியலூர் மாவட்ட எஸ்.பி. அனில்குமார்கிரி, மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ்க்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவிட்டதை அடுத்து போலீசார் சசிகலாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News