செய்திகள்

கூடுவாஞ்சேரி அருகே பெண்ணை கடத்தி பலாத்காரம்: 4 வாலிபர்கள் கைது

Published On 2016-06-07 12:00 IST   |   Update On 2016-06-07 12:00:00 IST
கூடுவாஞ்சேரி அருகே இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கூடுவாஞ்சேரி:

கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் அப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள் இளம்பெண் தனியாக நடந்து செல்வதை பார்த்தனர். உடனே 2 பேர் அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்றனர்.

அங்குள்ள பாழடைந்த வீட்டில் வைத்து இளம்பெண்ணை 4 பேரும் பலாத்காரம் செய்தனர். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதனை பார்த்து 4 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அந்த இளம்பெண் செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊரப்பாக்கத்தை சேர்ந்த கண்ணன், சந்திரசேகர் உள்பட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Similar News