செய்திகள்

காஞ்சீபுரம் அருகே பெண் மாயம்

Published On 2016-06-06 15:39 IST   |   Update On 2016-06-06 15:39:00 IST
காஞ்சீபுரம் அருகே பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் ஒரிக்கை பகுதியில் வசித்து வருபவர் பன்னீர் செல்வம். இவரது மனைவி தேவி (54). இவர் கடந்த மாதம் 5–ந்தேதி மாலை கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து காணாமல் போன தேவியை தேடி வருகின்றார்.

Similar News