செய்திகள்

தாம்பரத்தில் 3 பெண்களிடம் நகை பறிப்பு

Published On 2016-06-04 15:17 IST   |   Update On 2016-06-04 15:17:00 IST
தாம்பரத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பெண்களிடம் நகைகளை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தாம்பரம்:

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சூரத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மேரி. இவர் நேற்று இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த போது 2 பேர் 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.

இதேபோல நேற்று இரவு சேலையூர் அடுத்த மாடம் பாக்கம் மாருதி நகரை சேர்ந்த கவிதா மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது 2 மர்ம நபர்கள் 5 பவுன் நகையை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டான்.

தாம்பரம் ரெங்கநாத புரத்தில் ஒரு பெண்ணிடம் நகையை பறித்துவிட்டு ஒடிவிட்டனர். இந்த 3 சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

 

 

Similar News