செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கால்சென்டர் ஊழியர் பலி

Published On 2016-06-04 15:07 IST   |   Update On 2016-06-04 15:08:00 IST
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கால்சென்டர் ஊழியர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர்.

வேளச்சேரி:

கோவில்பட்டியை சேர்ந்தவர் ரவிசங்கர் மகன் முத்துக்குமார். வேளச்சேரி விஜயநகர் பஸ்நிலையம் அருகே உள்ள கால்சென்டரில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று நள்ளிரவு வேலை முடித்து மோட்டார் சைக்கிளில் தான் தங்கியிருந்த அறைக்கு சென்றார்.

வேளச்சேரி போலீஸ் நிலையம் அருகே ஒரு திருப்பத்தில் திரும்பும் போது பைக்கில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவம் இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தார்.

முத்துக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

Similar News