செய்திகள்
எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர் ரூ. 1 கோடி கேட்டு கடத்தல்: மர்ம கும்பல் டெலிபோனில் மிரட்டல்
மறைமலைநகர் அடுத்த பொத்தேரியில் நேற்று மாலை எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
செங்கல்பட்டு:
மதுராந்தகம், மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கவுதம் கோத்தாரி. வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம்.
இவரது மகன் பிரகாஷ் கோத்தாரி (வயது 22). மறைமலைநகரை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று மாலை அவர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பொத்தேரி பஸ்நிலையத்தில் நின்றார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் திடீரென பிரகாஷ் கோத்தாரியை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது வாயை பொத்தி காருக்குள் தூக்கிப் போட்டு கடத்தி சென்றனர்.
இரவு வரை பிரகாஷ் கோத்தாரி வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி அவர்கள் மறைமலை நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே இரவு கவுதம் கோத்தாரியின் செல்போனுக்கு மர்ம நபர்கள் பேசினர். அப்போது ‘‘உங்களது மகன் பிரகாஷ் கோத்தாரியை கடத்தி உள்ளோம். ரூ. 1 கோடி தர வேண்டும். இல்லையெனில் அவனை தீர்த்துக் கட்டிவிடுவோம். பணத்தை தரும் இடம் குறித்து பின்னர் தெரிவிப்போம்’’ என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டனர்.
அதிர்ச்சி அடைந்த கவுதம் கோத்தாரி இதுபற்றி போலீசுக்கு தெரிவித்தார். உஷாரான போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினர். தனிப்படையும் அமைக்கப்பட்டது.
கடத்தல்காரர்கள் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து விசாரணையை தொடங்கினர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி சாலையோரத்தில் கடத்தல் கும்பல் இறக்கி விட்டுள்ளதாக பிரகாஷ் கோத்தாரி பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் போலீசாரின் உதவியோடு பிரகாஷ் கோத்தாரியை மீட்டனர். அவரது உடலில் காயங்கள் இருந்தன. போலீசார் நடவடிக்கை எடுப்பதை அறிந்த கடத்தல் கும்பல் மாணவரை இறக்கி தப்பிச்சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து மாணவர் பிரகாஷ் கோத்தாரி கூறும் போது, ‘நேற்று மாலை 4 பேர் கும்பல் என்னை காரில் கடத்தி சென்றனர். இரவு முழுவதும் செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் பகுதிகளுக்கு காரிலேயே சுற்றினர்.
போலீசார் தேடுவதை அறிந்ததும் கடத்தல் கும்பல் என்னை கருங்குழியில் இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்’’ என்றார்.
மாணவரின் தந்தை கவுதம் கோத்தாரி பைனான்ஸ் தொழில் செய்து வருவதால் அவரிடம் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இந்த கடத்தல் சம்பவம் நடந்ததா? அல்லது மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பிரகாஷ் கோத்தாரி கடத்தப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மாணவர் பிராகஷ் கோத்தாரியிடமும் விசாரணை நடக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகம், மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கவுதம் கோத்தாரி. வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம்.
இவரது மகன் பிரகாஷ் கோத்தாரி (வயது 22). மறைமலைநகரை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று மாலை அவர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பொத்தேரி பஸ்நிலையத்தில் நின்றார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் திடீரென பிரகாஷ் கோத்தாரியை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது வாயை பொத்தி காருக்குள் தூக்கிப் போட்டு கடத்தி சென்றனர்.
இரவு வரை பிரகாஷ் கோத்தாரி வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி அவர்கள் மறைமலை நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே இரவு கவுதம் கோத்தாரியின் செல்போனுக்கு மர்ம நபர்கள் பேசினர். அப்போது ‘‘உங்களது மகன் பிரகாஷ் கோத்தாரியை கடத்தி உள்ளோம். ரூ. 1 கோடி தர வேண்டும். இல்லையெனில் அவனை தீர்த்துக் கட்டிவிடுவோம். பணத்தை தரும் இடம் குறித்து பின்னர் தெரிவிப்போம்’’ என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டனர்.
அதிர்ச்சி அடைந்த கவுதம் கோத்தாரி இதுபற்றி போலீசுக்கு தெரிவித்தார். உஷாரான போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினர். தனிப்படையும் அமைக்கப்பட்டது.
கடத்தல்காரர்கள் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து விசாரணையை தொடங்கினர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி சாலையோரத்தில் கடத்தல் கும்பல் இறக்கி விட்டுள்ளதாக பிரகாஷ் கோத்தாரி பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் போலீசாரின் உதவியோடு பிரகாஷ் கோத்தாரியை மீட்டனர். அவரது உடலில் காயங்கள் இருந்தன. போலீசார் நடவடிக்கை எடுப்பதை அறிந்த கடத்தல் கும்பல் மாணவரை இறக்கி தப்பிச்சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து மாணவர் பிரகாஷ் கோத்தாரி கூறும் போது, ‘நேற்று மாலை 4 பேர் கும்பல் என்னை காரில் கடத்தி சென்றனர். இரவு முழுவதும் செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் பகுதிகளுக்கு காரிலேயே சுற்றினர்.
போலீசார் தேடுவதை அறிந்ததும் கடத்தல் கும்பல் என்னை கருங்குழியில் இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்’’ என்றார்.
மாணவரின் தந்தை கவுதம் கோத்தாரி பைனான்ஸ் தொழில் செய்து வருவதால் அவரிடம் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இந்த கடத்தல் சம்பவம் நடந்ததா? அல்லது மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பிரகாஷ் கோத்தாரி கடத்தப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மாணவர் பிராகஷ் கோத்தாரியிடமும் விசாரணை நடக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.