செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் மர்ம பை

Published On 2016-06-01 14:59 IST   |   Update On 2016-06-01 14:59:00 IST
சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் ஏற்படுத்திய பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் 2-வது வருகை நுழைவு வாயிலில் ஒரு பை அனாதையாக கிடந்தது. இதைப்பார்த்து பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மோப்ப நாயுடன் போலீசார் அங்கு வந்து சோதனை செய்தனர். பையை திறந்து பார்த்தபோது அதில் துணிகள் இருந்தது. பையை பயணி ஒருவர் தவற விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது.

Similar News