செய்திகள்
தாம்பரத்தில் மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு
சேலையூர் அருகே சாலையில் நடந்து வந்த மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 10பவுன் நகையை பறித்து சென்றனர்.
தாம்பரம்:
திருநெல்வேலியை சேர்ந்தவர் கலாவதி (வயது65). இவரது மகள் ராஜியின் வீடு சேலையூர் அருகேயுள்ள சந்தோஷபுரத்தில் உள்ளது. மகளை பார்ப்பதற்காக கலாவதி கடந்த வாரம் வந்தார்.
இன்று காலையில் அவர் பால் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கலாவதி அணிந்திருந்த தாலி செயினை பறித்தனர். கலாவதி செயினை இறுக பிடித்துக் கொண்டார். இதனால் கொள்ளையர்கள் பாதி செயினை மட்டும் அறுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். கொள்ளை போன செயின் 10 பவுன் ஆகும்.
இதுகுறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்தவர் கலாவதி (வயது65). இவரது மகள் ராஜியின் வீடு சேலையூர் அருகேயுள்ள சந்தோஷபுரத்தில் உள்ளது. மகளை பார்ப்பதற்காக கலாவதி கடந்த வாரம் வந்தார்.
இன்று காலையில் அவர் பால் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கலாவதி அணிந்திருந்த தாலி செயினை பறித்தனர். கலாவதி செயினை இறுக பிடித்துக் கொண்டார். இதனால் கொள்ளையர்கள் பாதி செயினை மட்டும் அறுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். கொள்ளை போன செயின் 10 பவுன் ஆகும்.
இதுகுறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.