செய்திகள்

காஞ்சிபுரம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2016-05-28 12:14 IST   |   Update On 2016-05-28 12:14:00 IST
காஞ்சிபுரம் அருகே பஸ் மோதி வாலிபர் பலியானார்.

காஞ்சிபுரம்:

அரக்கோணத்தை அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். தனியார் பேருந்து கம்பெனியில் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து இருந்தார்.

அப்போது அப்பகுதி காஞ்சிபுரம்-திருத்தணி சாலையில் சாலையைக் கடக்கும் போது தனியார் கம்பெனி பஸ் அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

Similar News