செய்திகள்

வாக்குப்பெட்டியை சேதப்படுத்திய வழக்கு: 7 பேருக்கு அபராதம் - சிவகங்கை கோர்ட்டு உத்தரவு

Published On 2016-05-25 13:54 IST   |   Update On 2016-05-25 13:54:00 IST
வாக்குப்பெட்டியை சேதப்படுத்திய வழக்கில் 7 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை:

வாக்குப்பெட்டியை சேதப்படுத்திய வழக்கில் 7 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

மானாமதுரை தாலுகா விளாக்குளம் பகுதியில் கடந்த 2006–ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின்போது அங்குள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பெட்டி சேதப் படுத்தப்பட்டது.

இது தொடர்பாக அப்போதைய தேர்தல் அதிகாரி இளம்சூரியன், மானாமதுரை போலீசில் புகார் செய்தார். வேலுச்சாமி உள்பட 10 பேர் மீது போலீ சார் வழக்குப்பதிவு செய்த னர்.

இது தொடர்பான வழக்கை சிவகங்கை நீதி மன்றம் விசாரித்து வந்தது. வழக்கு காலத்தில் 3 பேர் இறந்துவிட்ட நிலை யில் மீதம் உள்ள 7 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

Similar News