செய்திகள்
நாசரேத் அருகே கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
நாசரேத் அருகே கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமி.
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளை கீழத்தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 50). இவர் கோவையில் ஒரு மளிகை கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பூபதி (45). இவர்களுக்கு ஓரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இவர்களது மகள் லெட்சுமிக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பூபதி வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். அப்போது அதிகாலை 1.30 மணியளவில் வீட்டின் ஓட்டைப் பிரித்து மர்ம ஆசாமி உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி லெட்சுமி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்து சென்றான். வீட்டில் இருந்த செல்போனையும் திருடி சென்றான். அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இதுகுறித்து பூபதி நாசரேத் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பால்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளை கீழத்தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 50). இவர் கோவையில் ஒரு மளிகை கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பூபதி (45). இவர்களுக்கு ஓரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இவர்களது மகள் லெட்சுமிக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பூபதி வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். அப்போது அதிகாலை 1.30 மணியளவில் வீட்டின் ஓட்டைப் பிரித்து மர்ம ஆசாமி உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி லெட்சுமி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்து சென்றான். வீட்டில் இருந்த செல்போனையும் திருடி சென்றான். அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இதுகுறித்து பூபதி நாசரேத் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பால்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.