செய்திகள்

காங்கயத்தில் மோட்டார் சைக்கிள் மோதி சமையல் தொழிலாளி பலி

Published On 2016-05-22 17:01 IST   |   Update On 2016-05-22 17:01:00 IST
காங்கயத்தில்மோட்டார் சைக்கிள் மோதி சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

காங்கயம்:

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). சமையல் தொழிலாளி. இவர் காங்கயத்தில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு சமையல் வேலைக்கு நேற்று சென்றார்.

பின்னர் வேலை முடிந்து ஈரோட்டுக்கு செல்ல காங்கயம் பஸ் நிலையம் அருகில் சுப்பிரமணி நடந்து வந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள், சுப்பிரமணி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிசாபமாக இறந்தார்.

இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News