செய்திகள்

நன்னிலம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2016-05-22 16:18 IST   |   Update On 2016-05-22 16:18:00 IST
நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

நன்னிலம்:

நன்னிலம் அருகே உள்ள சலிப்பேரி அக்கரை தென்னஞ்சாரைச் சேர்ந்த தியாகராஜன் மகன் மணிகண்டன் (வயது 20). இவர் மோட்டார் சைக்கிளில் சன்னாநல்லூரிலிருந்து சலிப்பேரிக்கு வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மணிகண்டன் இறந்தார்.

இது குறித்து தியாகராஜன் நன்னிலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News