செய்திகள்

மயிலாடுதுறை அருகே வியாபாரி குத்திக் கொலை: நண்பர் கைது

Published On 2016-05-12 22:18 IST   |   Update On 2016-05-12 22:18:00 IST
மயிலாடுதுறை அருகே வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை கவர தெருவை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் சரவணன் (30). வேனில் சென்று ரெடிமேடு துணிகள் விற்பனை செய்து வந்தார். திருமணம் ஆகவில்லை.

அப்பகுதியை சேர்ந்த கண்ணையன் மகன் வீரகுமார். இவர் சமையல் காண்டிராக்ட் வேலை செய்து வருகிறார். இருவரும் உறவினர்கள். மாப்படுகை அண்ணா சிலை அருகே குடிபோதையில் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.இதனை அருகில் இருந்தவர்கள் விலக்கி விட்டனர்.

பின்னர் மாப்படுகை காவிரி ஆற்றுப் பாலம் அருகே சரவணன் மற்றும் சிலர் மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது கையில் கத்தியுடன் அங்கு வந்த வீரகுமார் திடீரென சரவணனை குத்தி விட்டு ஓடி விட்டார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து சரவணனின் தந்தை பாலு மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார்.

சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சம்பவ இடத்திற்கு மயிலாடுதுறை டி.எஸ்.பி. சரவணகுமார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். கொலையாளி வீரகுமார் மாப்படுகை அண்ணா சிலை அருகே பதுங்கி இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News