செய்திகள்
புதுக்கோட்டை அருகே கிணற்றில் விஷ வாயு தாக்கி 4 பேர் பலி
புதுக்கோட்டை அருகே ஆட்டை மீட்பதற்காக கிணற்றில் இறங்கிய 4 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள துவார் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 45), விவசாயி. இவரது வீட்டின் பின்னால் 50 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. அதில் தற்போது 10 அடிக்கு கழிவு தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக கிடந்தது.
இந்த நிலையில் சவுந்திரராஜன் வளர்த்து வந்த ஆடு ஒன்று இன்று காலை அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதையடுத்து ஆட்டை மீட்பதற்காக சவுந்திரராஜன் உள்ளே இறங்கினார். பின்னர் கயிறு மூலம் ஆட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் மேலே வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர் அப்பகுதியை சேர்ந்த ரெங்கசாமி (55) என்பவர் கிணற்றுக்குள் இறங்கினார். அவரும் நீண்ட நேரமாகியும் மேலே வரவில்லை. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பிரமையா (60), அய்யாவு (55) ஆகியோர் இறங்கினர். அவர்களும் மேலே வரவில்லை. இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் தொற்றியது.
அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பார்த்த போது, 4 பேரும் கிணற்றுக்குள் மூழ்கி பலியானது தெரிய வந்தது.
இது குறித்த தகவல் அறிந்ததும் மலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சவுந்திரராஜன் வீட்டின் கிணறு கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் அதில் கிடந்த தண்ணீர் கெட்டு போய் இருந்ததால், விஷ வாயு உண்டாகி 4 பேரும் பலியாகியது தெரிய வந்தது.
கிணற்றில் இருந்த தண்ணீரை தீயணைப்பு வீரர்கள் மின்மோட்டார் மூலம் வெளியேற்றி அதன் பிறகு 4 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கிணற்றில் இறங்கிய 4 பேர் விஷ வாயு தாக்கி பலியான சம்பவத்தால் துவார் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 4 பேரின் உடல்களையும் பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள துவார் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 45), விவசாயி. இவரது வீட்டின் பின்னால் 50 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. அதில் தற்போது 10 அடிக்கு கழிவு தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக கிடந்தது.
இந்த நிலையில் சவுந்திரராஜன் வளர்த்து வந்த ஆடு ஒன்று இன்று காலை அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதையடுத்து ஆட்டை மீட்பதற்காக சவுந்திரராஜன் உள்ளே இறங்கினார். பின்னர் கயிறு மூலம் ஆட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் மேலே வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர் அப்பகுதியை சேர்ந்த ரெங்கசாமி (55) என்பவர் கிணற்றுக்குள் இறங்கினார். அவரும் நீண்ட நேரமாகியும் மேலே வரவில்லை. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பிரமையா (60), அய்யாவு (55) ஆகியோர் இறங்கினர். அவர்களும் மேலே வரவில்லை. இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் தொற்றியது.
அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பார்த்த போது, 4 பேரும் கிணற்றுக்குள் மூழ்கி பலியானது தெரிய வந்தது.
இது குறித்த தகவல் அறிந்ததும் மலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சவுந்திரராஜன் வீட்டின் கிணறு கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் அதில் கிடந்த தண்ணீர் கெட்டு போய் இருந்ததால், விஷ வாயு உண்டாகி 4 பேரும் பலியாகியது தெரிய வந்தது.
கிணற்றில் இருந்த தண்ணீரை தீயணைப்பு வீரர்கள் மின்மோட்டார் மூலம் வெளியேற்றி அதன் பிறகு 4 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கிணற்றில் இறங்கிய 4 பேர் விஷ வாயு தாக்கி பலியான சம்பவத்தால் துவார் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 4 பேரின் உடல்களையும் பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.