செய்திகள்

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் வினியோகம் தள்ளிவைப்பு

Published On 2016-05-07 14:52 IST   |   Update On 2016-05-07 14:52:00 IST
பிளஸ்-2 தேர்வு முடிவு 17-ந்தேதி வெளியாவதால் விண்ணப்பம் வழங்குவது தள்ளி வைக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர். விமலா தெரிவித்துள்ளார்.
சென்னை:

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு வருகிற 9-ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும் என்று ஏற்கனவே மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதமாக வருவதால் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் வழங்குவதும் தாமதமாகிறது.

இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர். விமலா கூறியதாவது:-

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்புக்கு 9-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பிளஸ்-2 தேர்வு முடிவு 17-ந் தேதி வெளியாவதால் விண்ணப்பம் வழங்குவது தள்ளி வைக்கப்படுகிறது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News