செய்திகள்

காஞ்சீபுரத்தில் 6 இடங்களில் வாக்கு எண்ணும் மையம்

Published On 2016-05-02 14:25 IST   |   Update On 2016-05-02 14:25:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் காஞ்சீபுரம் அடுத்த காரப்பேட்டை பல்கலைகழக பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது.

மற்ற தொகுதிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்கள் குறித்த விவரம் வருமாறு:

சோழிங்கநல்லூர் – முகம்மது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேடவாக்கம் சாலை, சோழிங்கநல்லூர்.

ஆலந்தூர் , பல்லாவரம் – எம்.ஐ.டி.கல்லூரி, குரோம்பேட்டை, சென்னை.

தாம்பரம் – ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைப்பள்ளி, சேலையூர், தாம்பரம்.

செங்கல்பட்டு, திருப்போரூர் – ஆசான் மெமோரியல் பொறியியல் கல்லூரி, தண்டரை, திருப்போரூர்.

செய்யூர், மதுராந்தகம் – சௌபாக்கியா சௌகர் அரசு மேல்நிலைப்பள்ளி, மதுராந்தகம்.

Similar News