செய்திகள்
தொழிலாளர்களின் கோரிக்கையான வைப்பு நிதிக்கான வட்டி உயர்த்தப்பட்டு உள்ளது: பண்டாரு தத்தாத்ரேயா பேட்டி
தொழிலாளர்களின் கோரிக்கையான வைப்பு நிதிக்கான வட்டி உயர்த்தப்பட்டு உள்ளதாக பண்டாரு தத்தாத்ரேயா பேட்டி அளித்துள்ளார்.
ஆலந்தூர்:
மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தி தரவேண்டும் என தொழிலாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து இருந்தனர். ஆனால் இதற்கான வட்டியை குறைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் கூறி வந்தது. இது பற்றி மத்திய நிதி அமைச்சகத்திடம் பேசி தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டியை 8.7 சதவீதத்தில் இருந்து 8.8 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தொழிலாளர்கள் நலன் காக்கும் அரசு. தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று பல சலுகைகளை நிறைவேற்றி கொடுத்து உள்ளது. இதனுடைய தாக்கம் தமிழகம், கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தி தரவேண்டும் என தொழிலாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து இருந்தனர். ஆனால் இதற்கான வட்டியை குறைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் கூறி வந்தது. இது பற்றி மத்திய நிதி அமைச்சகத்திடம் பேசி தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டியை 8.7 சதவீதத்தில் இருந்து 8.8 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தொழிலாளர்கள் நலன் காக்கும் அரசு. தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று பல சலுகைகளை நிறைவேற்றி கொடுத்து உள்ளது. இதனுடைய தாக்கம் தமிழகம், கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.