செய்திகள்
நாகை மாவட்டத்தில் மே 1–ந்தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும்: கலெக்டர் தகவல்
நாகை மாவட்டத்தில் மே 1–ந்தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மே தினத்தை முன்னிட்டு மே 1–ந்தேதி தமிழ்நாடு மதுபான கடைகள் மற்றும் பார்கள் விதிகள் 2003 விதி 12–ன்படியும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) 1981 விதி 25 ஆகியவையின் கீழ் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் (பார்) உரிமம் பெற்றுள்ள ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் ஆகியவை உள்ளிட்ட அனைத்து மதுபானக் கடைகளும், மதுக் கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபானம் விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.