செய்திகள்

வேதாரண்யம் அருகே குடிசை வீடு எரிந்து சேதம்

Published On 2016-04-28 17:24 IST   |   Update On 2016-04-28 17:25:00 IST
வேதாரண்யம் அருகே குடிசை வீடு எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த செட்டிப்புலம் செரையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சோமு (வயது 61). வீட்டில் சமையல் செய்யும் போது திடீரென தீப்பிடித்து கொட்டகையும், வீட்டின் ஒரு பகுதியும் எரிந்து சேதமானது.

இதன் சேத மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது. வேதாரண்யம் தீயணைப்பு துறையிணர் வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News