செய்திகள்

கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவி எரித்துக்கொலை: கணவருக்கு 7 ஆண்டு சிறை

Published On 2016-04-14 20:14 IST   |   Update On 2016-04-14 20:14:00 IST
கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை எரித்து கொன்ற வழக்கில் கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, கறம்பக்காடு  ஜெமீன்   கிராமத்தை சேர்ந்தவர் ஜீவாநந்தம். இவருக்கும்   அதே  பகுதியை சேர்ந்த ஜீவா (வயது 23) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு  முன்பு  திருமணம் நடைபெற்றது.
இந்த  நிலையில்  ஜீவா கடந்த  மாதம்   23- ந்தேதி  தீவைத்து தற்கொலை செய்து கொண்டதாக  கீரனூர் போலீஸ்  நிலையத்தில்  அவரது   கணவர்   ஜீவாநந்தம் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி   வந்தனர்.   இதில் ஜீவாவை தீவைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது கணவர் ஜீவாநந்தத்தை   போலீசார் கைது   செய்து   மேலும் விசாரணை  நடத்தினர். இதில் வரதட்சணை கேட்டு ஜீவாவை தீ வைத்து கொலை செய்தது  தெரியவந்தது.

பின்னர்   அவரை   புதுக்கோட்டை  கோர்ட்டில் போலீசார்  ஆஜர்படுத்தினர். வழக்கை  விசாரித்த  நீதிபதி ஜீவா நந்தத்துக்கு 7 ஆண்டு சிறை   தண்டனை   விதித்து தீர்ப்பளித்தார். அதன் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜீவாநந்தத்துக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இந்த குழந்தை   அவரது   பாட்டியின் பராமரிப்பில் உள்ளது.

Similar News