உள்ளூர் செய்திகள்

பாளையில் நர்சு வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

Published On 2022-07-15 09:43 GMT   |   Update On 2022-07-15 09:43 GMT
  • நேற்று இரவு மொட்டை மாடியில் மகனும், கீழ்தளத்தில் செல்வ பெருமாள், செல்வி ஆகியோரும் தூங்கி உள்ளனர்.
  • அந்த பகுதியில் மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

நெல்லை:

பாளை ஐகிரவுண்டு சரண்யா நகரை சேர்ந்தவர் செல்வ பெருமாள். இவர் பி.எஸ்.என்.எல். ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இவரது மனைவி செல்வி (வயது 55). இவர் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

நேற்று இரவு மொட்டை மாடியில் மகனும், கீழ்தளத்தில் செல்வ பெருமாள், செல்வி ஆகியோரும் தூங்கி உள்ளனர். நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும்.

இன்று காலை வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது கொள்ளை நடந்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் பாளை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதே போல அந்த பகுதியில் மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த 3 சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News