உள்ளூர் செய்திகள்

ஸ்கூட்டியில் சென்ற இளம் பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

Published On 2023-06-05 06:45 GMT   |   Update On 2023-06-05 06:45 GMT
  • மஞ்சள் நீராட்டு விழாவுக்கு செல்ல வந்து கொண்டிருந்தார்.
  • 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள ஓட்டேரி பாளையத்தை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி சத்யா( வயது 29.) இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ந் தேதி தனது ஸ்கூட்டியில் ஓட்டேரிபாளையத்தில் இருந்து செஞ்சி நோக்கி தனது தோழியின் மகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு செல்ல வந்து கொண்டிருந்தார். குண்டலப்புலியூர் அருகே வரும்போது அவரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள்2 பேர் சத்யா கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்து சத்யா கொடுத்த புகாரின்பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை எடுத்து செஞ்சி டி.எஸ்.பி. கவினா தலைமையில் குற்றப்பிரிவு தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது. அந்த அடையாளத்தை வைத்து நகை பறித்த வாலிபர்களான திருவண்ணாமலையை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் முபாரக் (வயது 30) மற்றும் சாகித் அலி மகன் பாரூக் அப்துல்லா (வயது 23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News