உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் 2 பெண்கள் மாயம்

Published On 2023-03-16 15:41 IST   |   Update On 2023-03-16 15:41:00 IST
  • உறவினர் வீட்டிற்கு இறுதி சடங்கிற்காக சென்ற லாவண்யா மற்றும் அவருடைய மகன் தர்ஷன் வீடு திரும்பவில்லை.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 தருமபுரி,

தருமபுரி மாவட்டம், அதகப்பாடி அருகே உள்ள குஞ்சி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் ஆட்டோ டிரைவராக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (வயது 45).

சம்பவத்தன்று ஆட்டோ ஓட்ட சென்ற பழனி மாலை விடு திரும்பி பார்க்கும் போது அவருடைய மனைவி சாந்தி காணவில்லை. இது குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் பெரும்பாலை அருகே உள்ள சி.பாசிப்பாலி கோம்பை பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி லாவண்யா (வயது30). இவருக்கு தர்ஷன் என்ற மகன் உள்ளார்.

சம்பவத்தன்று உறவினர் வீட்டிற்கு இறுதி சடங்கிற்காக சென்ற லாவண்யா மற்றும் அவருடைய மகன் தர்ஷன் வீடு திரும்பவில்லை.

இது குறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News