உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே கார் மோதி 2 பெண்கள் பலி

Published On 2022-09-21 08:48 GMT   |   Update On 2022-09-21 08:48 GMT
  • கடலூர் அருகே கார் மோதி 2 பெண்கள் பலியானர்கள்.
  • காரை ஓட்டி வந்த டிரைவர் நாகராஜ் போலீசில் சரண் அடைந்துள்ளார்.

கடலூர்:

கடலூர் அருகே பெரியபட்டு பகுதியில் இன்று மதியம் கலிபாமேரி உள்பட 5 பேர் சாலையோரம் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் கலிபாமேரி, தேவதர்ஷினி ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்தில் பலியானார்கள். இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்த டிரைவர் நாகராஜ் போலீசில் சரண் அடைந்துள்ளார்.

Tags:    

Similar News