உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்

Published On 2023-05-10 15:27 IST   |   Update On 2023-05-10 15:27:00 IST
  • கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
  • போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்கு பதிவு செய்து மாயமான சத்யாவை தேடிவருகின்றனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ராமியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமு. கூலித்தொழிலாளியான இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகி அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். இதில் இளைய மகள் சத்யா (வயது20). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இவர் ராமியம்பட்டியில் உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து ராமு கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்கு பதிவு செய்து மாயமான சத்யாவை தேடிவருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோன்று தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த சீகலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் திவ்யா. இவர் நாகனம்பட்டி அரசு கலை கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று திவ்யா கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை கணேசன் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News