உள்ளூர் செய்திகள்
நிலக்கோட்டையில் பிளஸ்-2 மாணவி மாயம்
- நிலக்கோட்டையில் பிளஸ்-2 மாணவி திடீரென மாயமானார்
- மாணவி மாயமானாரா அல்லது கடத்தப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இவர் நேற்று பள்ளிக்கு சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின்பேரில் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராஜ் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
மாணவி மாயமானாரா அல்லது கடத்தப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.