உள்ளூர் செய்திகள்

புகையிலை விற்ற 2 வியாபாரிகள் கைது

Published On 2022-11-19 14:29 IST   |   Update On 2022-11-19 14:29:00 IST
  • பசுவந்தனை அருகே உள்ள புங்கவர் நத்தம் கிராமத்தில் போலீசார் மளிகை கடைகளில் சோதனை நடத்தினர்
  • தடை செய்யப்பட்டிருந்த புகையிலை பாக்கெட் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது

புதியம்புத்தூர்:

பசுவந்தனை அருகே உள்ள புங்கவர் நத்தம் கிராமத்தில் பசுவந்தனை போலீசார் மளிகை கடைகளில் புகையிலை விற்கப்படுகிறதா என்று சோதனை நடத்தினர்.

அப்போது தடை செய்யப்பட்டிருந்த புகையிலை பாக்கெட் விற்பனை செய்த காமராஜ் (வயது42), சேர்மராஜ் (50) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News